ராஜ்,
அற்புதம்
நம்மில் பலர்
பல காலம் கப்பலுக்குள் பிறந்து வளர்ந்து
மெதுவாக சிறகை விரிக்கக் கற்றுக் கொண்ட
பறவைகள்
வளர்ந்ததும்
பறக்க தெரியும்
ஆனால் நெடும் கடல்
கடந்து எங்கே சென்று சேர்வோம்
என்பது சரி வரத் தெரியாது
கப்பலை விரும்பினாலும்
வெறுத்தாலும் அது ஒன்றே கதி
அதன் உள்ளே உள்ள உலகம்
தான் நமக்கு
வெளியே எங்கோ இருக்கும்
அதனை உலகங்களுக்கும்
வழி காட்டி
ஒரு சில பயணிகள்
நம்மை
பொறுத்திரு
கரை சேர்வாய் என்று
வழி காட்டுவார்கள்
ஒரு சிலர் நான் இறங்கும்
துறை முகம் இது
என்னுடன் வந்து விடு
என்பார்கள்
கரை தெரியும் போது
சிறகுகள்
குறைவான தூரம்
தெரிந்த பயணிகள்
சகவாசம் என்றெல்லாம்
சுகங்கள்
பழகியிருக்கும்
வெகு சில பறவைகள்
புதிய கரைகளை
பரீட்சித்துப் பார்க்கும்
வானத்தின்
காற்றின்
தூரங்களின்
எல்லைகளின்
பழைய பழகிய
பரிமாணங்களை
கொஞ்சம் கொஞ்சமாக
சோதித்துப் பார்த்தபடி
ஐம்பதற்குப் பின்
புதிய பரிமாணங்கள்
அற்புதம் தான்
அது ஒரு
இறை அருள்
நீ காத்திருக்கவில்லை
பெறுவதற்கு
அவன் காத்திருந்தான்
நீ கனிவதற்கு
செவ்வாய், 28 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக