பரிந்துணர்வின் எல்லை
ராஜ் டிவி காட்டுகிறது
கண்ணன் என மழலையை
குறும்பு செய்வான் பொய் சொல்வான்
திருடுவான் தாயினும் சாலப்பரிவான்
அவனை வெறுப்பாரில்லை அன்றி
ஒருப்பாரில்லை அவனைக்கண்டதும்
காதல் மட்டுமே
கம்சன், துர்யோதனன் கண்டனர் ஒரு
மாயாவியை - கோபியர் கண்டதோ
அன்பின் பெருக்கை - பாண்டவர்
கண்டவன் பக்தவத்சலன்
பலர் மடிந்தனர் பலர் செழித்தனர்
உவகையும் உக்கிரமும் அவரர்
அறிந்தது - அவன் காட்டியது
அன்பு மட்டுமே
அவனை அளவிட்டவர் யாருமிலர்
அவன் அன்பின் எல்லையை எவரும்
அறிந்திலர் - போற்றுவரும் தூற்றுவரும்
அவனுக்கு சமமே.
அன்புடன்
முரளி
செவ்வாய், 28 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக