செவ்வாய், 28 ஜூலை, 2009

நன்றி ganakkirathu

அபரிமிதமான உற்சாகம் உங்களிடம் இருந்து
கடல்கள் கடந்து வந்து சேர்ந்தது

நன்றி கனக்கிறது -
என் சொற்கள் என் உணர்வின் முன்
தோற்றுப் போகின்றன

இங்கே பாலைவனத்து வாழ்க்கை
தனிமை
வெளியே எப்போதாவது
சுழலும்
தூசி மண்டலத்தைப் பற்றிய
எப்போதும் நீங்காத அசூயை
என்னை
என் ஐம்பதுக்கும் அதிகமான
ஆண்டு வாழ்க்கை எனும்
உண்டியலைத் திறக்க வைத்து விட்டன
ஒவ்வொரு காசாக எடுத்து
அடுக்கத் துவங்கி உள்ளேன்
இன்னும் வெகு நேரம் ஆகும்
எல்லாவற்றையும் அடுக்க!

மறு ஜன்மத்தில் நம்பிக்கை வருகிறது!

என் வெற்றுப் பாதங்களுடன்
மீண்டும் நடை பழகுவேன்
எனக்குப் பெரியதான ஷூக்களில்,
எப்போதும் போல.

இந்த வலைப் பயணத்துக்கு
பிள்ளையார் சுழி போட்ட
ராஜ கோபாலனுக்கு ஒரு
பிரத்யேகமான நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக