அது என்னவோ உண்மைதான்
ஐம்பதுக்கு மேல் ஆண்டுகள் கடந்த பின்தான்
தத்துவங்கள் மெதுவாக ஆக்கிரமிக்கின்றன
வாழ்கையின் ஒவ்வொரு தடத்திற்கும்
அர்த்தம் தேட வைக்கின்றன
இத்தனை வருஷமாக இல்லாமல்
இப்போது ஏன் கர்நாடக இசையில்
ஏன் திடீரென்று ஒரு ரசனை?
பகைவனின் பகைமைக்குக் கூட ஒரு காரணத்தை கண்டுபிடிக்கின்ற
பக்குவம் எங்கிருந்து வந்தது?
அட! எப்போது அளவாக உண்ணத் தொடங்கினேன்?
இப்போதெல்லாம் எலிப் பந்தயம் ஏன் என்னைத்
தொந்தரவு செய்வதில்லை
சின்னச் சின்ன வாழ்க்கைத் துளிகளை ரசிக்கத் முடிகிறது
பூக்களை, மலையை, மடுவை
வீட்டு வாசலில் ஓடி படுங்குகிரா முயல் குட்டிகளை
பார்த்து மெய் மறந்து போக முடிகிறது
இவ்வளவு நாட்களாக இல்லாமல் ஏன் இப்போது?
ஆம் ஐம்பது ஆகி விட்டது..
உண்மையான வாழ்க்கை இப்போதுதான் ஆரம்பிக்கிறதோ?
நன்றி கோபாலனுக்கு
முரளியின் தமிழ்ப் பற்று கண்டு மகிழ்ச்சி
மேலும் மேலும் எழுதி அனுப்புங்கள்
நான் ஒரு நம்பிக்கையுடன் ரசிகன்
கோபாலா! பாலைவனத்தில் மட்டும் தனிமை இல்லை. இங்கே குறிஞ்சி நாடுதான்; குடும்பத்தோடுதான்; ஆனாலும் தனிமை சமயத்தில் தலை காட்டுவதுண்டு.
வலைப் பயணம் ஓர் சரியான மருந்து இதற்க்கு. நேரம் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறது. நேரம் கிடைக்கும்ப் போதெல்லாம் எழுத முயற்சி செய்வேன்
மீண்டும் வருவோம்
ராஜ்
செவ்வாய், 28 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக