அன்றாட நெருக்கடிகளில்
காணாமல் போய் விடுகிற
ஆத்மார்த்தமான அபிலாஷைகள் சில
அத்திப் பூக்கள் போல
எப்போதாவது மலர்வது உண்டு
நேற்று என் வாழ்வில் பூத்தது ஒரு பூ.
அம்மாவின் எழுபத்து ஐந்து வருட
வாழ்க்கையின் குறியீடான நேற்று
அம்மாவை மனைவியுடன்
சென்று
வணங்கி
ஆசீர்வாதம்
பெறும்
பெரும் பேறு கிடைத்தது
என் சிந்தைகளில்
எவ்வளவோ நான்
எடுத்துச் சென்றாலும்
அம்மாவின்
எளிமையின் முன்
அவை உருகி விடுகின்றன
ஒரு முழுமையின்
தரிசனத்தில்
ஒரு சேரும் இடத்தின்
உத்தரவாதத்தில்
ஒரு உண்மையின்
சக்தி வெளிப்பாட்டில்
என் சிந்தைகள்
திட்டங்கள்
ஆசைகள்
சர்வமும்
எளிதாகி
வாழ்வை
வாழ்வாக
யதார்த்தமாக
சந்திக்கின்றன
என்னை
என்
நிழல்களிலிருந்து
விலக்கி
நான்
நானாகிற
ஒரு மகத்தான
உண்மைத்தருணம் இது
மிக அபூர்வமாக
வெகு சில கோவில்களில்
கிடைக்கும்
அமைதி
இந்தத் தருணத்திற்குள்
வேரூன்றி இருக்கிறதை
என்னால் உணர முடிகிறது
இந்த சத்திய தரிசனம்
நித்தியம் தொடர
இறை அருள் புரிய வேண்டும்
என் எழுபத்து ஐந்தின்
காலையும்
இந்த சத்திய தரிசனம்
எனக்குக் கிடைக்க வேண்டும்
வேண்டினேன்
அம்மா மறுக்க வில்லை
அம்மாவின் அன்பு
பூட்டப்படாத கதவுகள் கொண்ட
மறுப்பின் வாசனை அறியாத
எதிர்மறை அதிர்வுகள் ஏதும் அற்ற
எப்பொழுதும்
சிரத்தை விழித்தொளிரும்
தெய்வ சன்னதி போன்றது
இங்கே
பிரார்த்தனைகள்
ஒவ்வொன்றும்
உணமையின்
ஊற்றுக்கண்ணிலிருந்து
தான் வெளிப்படும்
இந்த பிரார்த்தனைகள்
தான்
இந்த கோவிலுக்குள்
நம்மை வழி நடத்தும்
தீபங்கள்
சத்திய தரிசனத்தை
இவை
தினமும்
சாத்தியம் ஆக்குகின்றன
திங்கள், 3 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக