திங்கள், 18 மே, 2009
புதன், 13 மே, 2009
ஞாயிறு, 10 மே, 2009
என் கலந்த உணர்வுகள்
என் கலந்த உணர்வுகள்
என்னை அந்த தங்க சுரங்கத்தின்
வெளியே கொண்டு வந்து விட்டிருப்பது
தவிர்க்க முடியாததாகிவிட்டது
என்னை இந்தியா அழைத்தது
இல்லை இல்லை
என் தாய் அழைத்தாள்
என்றால் உங்களுக்கு என்ன
எனக்கே கூட
ஆச்சரியமாகத் தான்
இருக்கிறது
நான் உரிமை எடுத்துக்கொள்ளக்
கூடிய உறவுகளுடன் எல்லாம்
நான் சமீப காலமாக வேண்டினேன்
தங்கள் வாக்கை வீண் செய்யாதீர்கள்
வாக்கு போடுங்கள் என்று
என்னிடம் வலையில் வந்த
சில தபால்கள் வாக்கை வீண் செய்ய
வேண்டாம் யாருக்கும் அதைப்
பெற தகுதி இல்லை என்றெல்லாம்
வந்த இந்த தபால்கள்
என்னை ரொம்பவும் பாதித்தன
நான் பல சமயம் வியந்ததுண்டு
இந்த விவாதங்களில் ஓங்கும்
குரல்களுக்கு சொந்தக்காரர்களில்
எவ்வளவு பேர் உண்மையில்
வாக்குச் சாவடி சென்று
தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி
வேட்பாளர்களில் ஒருவரின் மீது
நம்பிக்கை வைத்து வாக்குச்
செலுத்தப் போகிறார்கள் என்று?
ஆனால் உலக அறிவிலும்
நாட்டு நிலவரத்திலும்
அறிவார்ந்த இவர்கள்
யாருக்கும் வாக்கு செலுத்த
வேண்டாம் என்று ஒரு
உரத்த சிந்தனை பரப்புவார்கள்
என்று என்னால் கற்பனை
செய்து பார்த்திருக்க முடியவில்லை
நான் இந்த வலைக்கடிதத்துக்கு
என் உணர்ச்சி பூர்வமான ஒரு
பதிலை நம் முன்னோர்கள்
போராடிப் பெற்ற இந்த
வாக்கை நீங்கள் வீண் செய்து விடாதீர்கள்
உங்கள் வாக்கை செலுத்துவதுதான்
அதனை உயிர்த்யாகம் செய்து நமக்காக
போராடிப் பெற்ற
சுதந்திரப் போராட்ட
த்யாகிகளுக்கெல்லாம் நாம் செய்யக்கூடிய
மரியாதை
ஜாதி மதங்களைப் பார்க்காமல்
நற்பணியை சீர்தூக்கிப் பார்க்கத் தெரிந்த
நாம் எல்லாம் விலகுவதால்
தேசம் பிரிவதற்கு உதவும்
வாக்கு வங்கிகள் இன்னும் வளரத்தான்
செய்யும்
அது நாம் தேசத்துக்கு செய்யும்
நற்செயல் ஆகாது என்றெல்லாம்
என் கோரிக்கை உணர்ச்சிகள் பொங்கிட
வலை போனது!
இப்படி நான் எழுதுவதற்கு
ஒரு வாரம் முன்பு தான்
ஏதோ ஒரு தவறான உடல் பயிர்ச்சியாலோ
என்ன காரணத்தினாலோ
என் இடது முழங்கால்
முழுதும் இயங்காமல்
முரண்டு பண்ண
அலுவலகம் சென்று வருவதே
பெரிய சவால் ஆனது
இதோடு ஆன்லைன்
முன் பதிவும் கெட
நான் வாக்குக்காக போக
இருந்த என் பயணத்தை
ரத்து செய்தேன்
என்னைப் போலே
வெளி நாட்டின் மூலைகளில்
வாக்குப் போட முடியாமல்
தவிக்கும் லட்சோப லட்ச
இந்தியர்களை நினைத்து
எனக்கு நானே ஆறுதல்
சொல்லிக் கொண்டேன்
இதற்கு தீர்வு
பயணம் அல்ல
தேசமும் ஒவ்வொரு வாக்கும்
வீணாகாமல் பெறுவதற்கு
தேர்தல் ஆணையம்
ஏதாவது செய்யத்தான்
வேண்டும் என்று கூட நினைத்தேன்
மனைவியிடம் வரவில்லை
என்று கூட தெரிவித்தேன்
நான் சில மௌனங்களைப்
பற்றி எழுதி இருந்ததைப் போல்
என் ஊருக்கு உபதேசத்திற்கும்
என் வாக்குப் போடாத
வெளிநாட்டு வாசத்திற்கும்
இடையே
என்னைக் கேள்வி கேட்கிற
என்னை எனக்கே மீட்கிற
ஒரு மௌனம்
எனக்குக் கிடைத்தது
என்னை இந்திய அன்னை
நினைவூட்டி அழைத்தது போல்
இருந்தது
அம்மாவிடம் நான் வருவதை
சொன்ன பொழுது
அம்மா சொன்ன வார்த்தை
என் கலந்த உணர்வுகளுக்கு
உரை எழுதியது போல்
இருந்தது:
"இந்த முறை
இந்தியாவுடைய
குடிமகனாக வரேன்னு
சொல்லு"
அன்னை அறியாத பிள்ளை மனசா?
தமிழமிழ்தில் எழுத ஆரம்பித்து
நாளை முதல் முதலாய் ஒரு நாள்
நான் எழுத மாட்டேன்
ஆனால் என் சிந்தனை ஓட்டங்கள்
மேகங்களுக்கிடையே
தமிழமிழ்தின் பக்கத்திலேயே
சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும்
நானும் என் கலந்த உணர்வுகளும்
ஒருவரை ஒருவர் சுற்றி சுற்றி வருவது போல்!
என்னை அந்த தங்க சுரங்கத்தின்
வெளியே கொண்டு வந்து விட்டிருப்பது
தவிர்க்க முடியாததாகிவிட்டது
என்னை இந்தியா அழைத்தது
இல்லை இல்லை
என் தாய் அழைத்தாள்
என்றால் உங்களுக்கு என்ன
எனக்கே கூட
ஆச்சரியமாகத் தான்
இருக்கிறது
நான் உரிமை எடுத்துக்கொள்ளக்
கூடிய உறவுகளுடன் எல்லாம்
நான் சமீப காலமாக வேண்டினேன்
தங்கள் வாக்கை வீண் செய்யாதீர்கள்
வாக்கு போடுங்கள் என்று
என்னிடம் வலையில் வந்த
சில தபால்கள் வாக்கை வீண் செய்ய
வேண்டாம் யாருக்கும் அதைப்
பெற தகுதி இல்லை என்றெல்லாம்
வந்த இந்த தபால்கள்
என்னை ரொம்பவும் பாதித்தன
நான் பல சமயம் வியந்ததுண்டு
இந்த விவாதங்களில் ஓங்கும்
குரல்களுக்கு சொந்தக்காரர்களில்
எவ்வளவு பேர் உண்மையில்
வாக்குச் சாவடி சென்று
தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி
வேட்பாளர்களில் ஒருவரின் மீது
நம்பிக்கை வைத்து வாக்குச்
செலுத்தப் போகிறார்கள் என்று?
ஆனால் உலக அறிவிலும்
நாட்டு நிலவரத்திலும்
அறிவார்ந்த இவர்கள்
யாருக்கும் வாக்கு செலுத்த
வேண்டாம் என்று ஒரு
உரத்த சிந்தனை பரப்புவார்கள்
என்று என்னால் கற்பனை
செய்து பார்த்திருக்க முடியவில்லை
நான் இந்த வலைக்கடிதத்துக்கு
என் உணர்ச்சி பூர்வமான ஒரு
பதிலை நம் முன்னோர்கள்
போராடிப் பெற்ற இந்த
வாக்கை நீங்கள் வீண் செய்து விடாதீர்கள்
உங்கள் வாக்கை செலுத்துவதுதான்
அதனை உயிர்த்யாகம் செய்து நமக்காக
போராடிப் பெற்ற
சுதந்திரப் போராட்ட
த்யாகிகளுக்கெல்லாம் நாம் செய்யக்கூடிய
மரியாதை
ஜாதி மதங்களைப் பார்க்காமல்
நற்பணியை சீர்தூக்கிப் பார்க்கத் தெரிந்த
நாம் எல்லாம் விலகுவதால்
தேசம் பிரிவதற்கு உதவும்
வாக்கு வங்கிகள் இன்னும் வளரத்தான்
செய்யும்
அது நாம் தேசத்துக்கு செய்யும்
நற்செயல் ஆகாது என்றெல்லாம்
என் கோரிக்கை உணர்ச்சிகள் பொங்கிட
வலை போனது!
இப்படி நான் எழுதுவதற்கு
ஒரு வாரம் முன்பு தான்
ஏதோ ஒரு தவறான உடல் பயிர்ச்சியாலோ
என்ன காரணத்தினாலோ
என் இடது முழங்கால்
முழுதும் இயங்காமல்
முரண்டு பண்ண
அலுவலகம் சென்று வருவதே
பெரிய சவால் ஆனது
இதோடு ஆன்லைன்
முன் பதிவும் கெட
நான் வாக்குக்காக போக
இருந்த என் பயணத்தை
ரத்து செய்தேன்
என்னைப் போலே
வெளி நாட்டின் மூலைகளில்
வாக்குப் போட முடியாமல்
தவிக்கும் லட்சோப லட்ச
இந்தியர்களை நினைத்து
எனக்கு நானே ஆறுதல்
சொல்லிக் கொண்டேன்
இதற்கு தீர்வு
பயணம் அல்ல
தேசமும் ஒவ்வொரு வாக்கும்
வீணாகாமல் பெறுவதற்கு
தேர்தல் ஆணையம்
ஏதாவது செய்யத்தான்
வேண்டும் என்று கூட நினைத்தேன்
மனைவியிடம் வரவில்லை
என்று கூட தெரிவித்தேன்
நான் சில மௌனங்களைப்
பற்றி எழுதி இருந்ததைப் போல்
என் ஊருக்கு உபதேசத்திற்கும்
என் வாக்குப் போடாத
வெளிநாட்டு வாசத்திற்கும்
இடையே
என்னைக் கேள்வி கேட்கிற
என்னை எனக்கே மீட்கிற
ஒரு மௌனம்
எனக்குக் கிடைத்தது
என்னை இந்திய அன்னை
நினைவூட்டி அழைத்தது போல்
இருந்தது
அம்மாவிடம் நான் வருவதை
சொன்ன பொழுது
அம்மா சொன்ன வார்த்தை
என் கலந்த உணர்வுகளுக்கு
உரை எழுதியது போல்
இருந்தது:
"இந்த முறை
இந்தியாவுடைய
குடிமகனாக வரேன்னு
சொல்லு"
அன்னை அறியாத பிள்ளை மனசா?
தமிழமிழ்தில் எழுத ஆரம்பித்து
நாளை முதல் முதலாய் ஒரு நாள்
நான் எழுத மாட்டேன்
ஆனால் என் சிந்தனை ஓட்டங்கள்
மேகங்களுக்கிடையே
தமிழமிழ்தின் பக்கத்திலேயே
சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும்
நானும் என் கலந்த உணர்வுகளும்
ஒருவரை ஒருவர் சுற்றி சுற்றி வருவது போல்!
சனி, 9 மே, 2009
இரண்டாம் வகுப்பு என் முதல் வகுப்பு
இந்த பள்ளிகளின் நினைவலைகள்
என்னை நன்றாக சூழ்ந்து கொண்டு விட்டன
என் இரண்டாம் வகுப்பு தான்
எனக்கு முதல் வகுப்பு
எனக்கு இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது
ஒரு முழு வருஷம் எழுதப் படிக்கக்
கற்றுக் கொள்ளாதவன்
இரண்டாம் வகுப்பில் எப்படி
நன்றாகப் படித்தேன் என்று
ஸ்லேட்டு நிறைய
நான் எழுதத் தொடங்கியது எல்லாம்
இந்த இரண்டாவது வகுப்பில் தான்
என்னை ஒரு படிக்கும் சமூகத்தின்
அங்கமாக நான் உணர்ந்து கொண்ட
முதல் வருடம் அது
எங்கள் வாழ்க்கையில் இந்த ஒரு
மாற்றம் முக்கியமானதாக
இருந்தது
முதல் முறையாக வீட்டுக்கும்
பள்ளிக்கும் இடையில்
மோட்டார் வாகனங்கள்
போகும் சாலைகள் இந்த ஊரில் தான்
சமாளிக்கக் கிடைத்தன
துறையூர்
ஆயிரத்து தொளாயிரத்து அறுபதுகளில்
இன்றைய துறையூரை விட சிறியதுதான்
என்றாலும் சாலைகளும் வாகனங்களும்
பெருகிய ஒரு பரபரப்பான ஊராகத் தான்
இருந்தது
இந்த அறுபதுகளில்
அக்காவின் பிஞ்சு விரல்கள் தான்
எனக்கும் என் தம்பிகளுக்கும்
பாதுகாப்பு
இந்தப் பாதுகாப்பு நீடிப்பதற்காக
எங்கள் அக்கா எட்டாவது
வரை ஒரு ஆரம்பப் பள்ளியில்
படித்தது எங்கள் குடும்பத்தின்
த்யாக குணங்களையும்
தலைமை குணங்களையும்
ஒரு சேர பெண்கள்
பெற்றிருந்ததற்கான
அதன் பலன்களை நாங்கள்
(மகன்கள்) முழுதும்
பெற்றதற்கான எத்தனையோ
உதாரணங்களில் ஒன்று
என் பள்ளிப் பருவ நினைவுகள்
பல்கிப் பெருகுகின்றன
இந்த எழுத்துக்கள்
இப்போதைக்கு என் பள்ளிக்கூடங்களை
வகுப்புகளை தெரு விளையாட்டுக்களை
வலம் வருவது தவிர்க்க முடியாததாகிறது
நினைவுகள் காலத்தின்
சுரங்கத்துக்குள் சென்று விட்டால்
வெளியே வருவது சிரமம் தான்
அதுவும் அந்த சுரங்கம்
தங்கச் சுரங்கம் என்னும் போது
என்னை நன்றாக சூழ்ந்து கொண்டு விட்டன
என் இரண்டாம் வகுப்பு தான்
எனக்கு முதல் வகுப்பு
எனக்கு இன்றும் ஆச்சரியமாக இருக்கிறது
ஒரு முழு வருஷம் எழுதப் படிக்கக்
கற்றுக் கொள்ளாதவன்
இரண்டாம் வகுப்பில் எப்படி
நன்றாகப் படித்தேன் என்று
ஸ்லேட்டு நிறைய
நான் எழுதத் தொடங்கியது எல்லாம்
இந்த இரண்டாவது வகுப்பில் தான்
என்னை ஒரு படிக்கும் சமூகத்தின்
அங்கமாக நான் உணர்ந்து கொண்ட
முதல் வருடம் அது
எங்கள் வாழ்க்கையில் இந்த ஒரு
மாற்றம் முக்கியமானதாக
இருந்தது
முதல் முறையாக வீட்டுக்கும்
பள்ளிக்கும் இடையில்
மோட்டார் வாகனங்கள்
போகும் சாலைகள் இந்த ஊரில் தான்
சமாளிக்கக் கிடைத்தன
துறையூர்
ஆயிரத்து தொளாயிரத்து அறுபதுகளில்
இன்றைய துறையூரை விட சிறியதுதான்
என்றாலும் சாலைகளும் வாகனங்களும்
பெருகிய ஒரு பரபரப்பான ஊராகத் தான்
இருந்தது
இந்த அறுபதுகளில்
அக்காவின் பிஞ்சு விரல்கள் தான்
எனக்கும் என் தம்பிகளுக்கும்
பாதுகாப்பு
இந்தப் பாதுகாப்பு நீடிப்பதற்காக
எங்கள் அக்கா எட்டாவது
வரை ஒரு ஆரம்பப் பள்ளியில்
படித்தது எங்கள் குடும்பத்தின்
த்யாக குணங்களையும்
தலைமை குணங்களையும்
ஒரு சேர பெண்கள்
பெற்றிருந்ததற்கான
அதன் பலன்களை நாங்கள்
(மகன்கள்) முழுதும்
பெற்றதற்கான எத்தனையோ
உதாரணங்களில் ஒன்று
என் பள்ளிப் பருவ நினைவுகள்
பல்கிப் பெருகுகின்றன
இந்த எழுத்துக்கள்
இப்போதைக்கு என் பள்ளிக்கூடங்களை
வகுப்புகளை தெரு விளையாட்டுக்களை
வலம் வருவது தவிர்க்க முடியாததாகிறது
நினைவுகள் காலத்தின்
சுரங்கத்துக்குள் சென்று விட்டால்
வெளியே வருவது சிரமம் தான்
அதுவும் அந்த சுரங்கம்
தங்கச் சுரங்கம் என்னும் போது
வெள்ளி, 8 மே, 2009
என் முதல் பள்ளிகள்
என் முதல் இரண்டு பள்ளிகள்
நினைவுக்கு வருகின்றன
ஒன்றில்
பட்டாம் பூச்சியை
பார்த்துக் கொண்டே
கான்க்ரீட் பள்ளியை விட்டு
விலகி ஓடியது
ஞாபகம் வருகிறது
இந்தப் பள்ளி நான் படித்த
பள்ளி அல்லவே அல்ல
அன்னை ஆசிரியை என்பதால்
எனக்குக் கிடைத்த
சலுகை இது
இரண்டாவது பள்ளியில்
எனக்கு ஒழுங்காக
கான்க்ரீட் பள்ளியை
நோக்கி போவதற்கான
கன்னி முயற்சிகள் ஓரளவு
நிகழ்ந்தேறின
இதில் என்னை ஊக்குவிப்பதற்கு
கையில் வீட்டில் கடைந்தெடுத்த
வெண்ணெய் பாட்டியிடம் இருந்து
கிடைத்தது இப்பொழுது கூட அதன்
தடயம் கையில் இருக்கக்கூடுமோ என்று
நினைக்கத் தூண்டும் அளவுக்கு
ஞாபகம் இருக்கிறது
இங்கும் கான்க்ரீட் பள்ளிக்கு
வெளியே பசுமைகள் மனதில்
பளிச்சென்று தோன்றத்தான் செய்கின்றன
ஒரு பெரிய கிராமம் போலவேதான்
இருந்த சிறு நகரம் ஒன்றிற்கு
இடம் பெயர்ந்த போது
கான்க்ரீட் பள்ளியின் சத்தங்கள்
சூழ்ந்த சுவர்களால் பிரிக்கப்படாத
வகுப்புகள் வாழ்க்கையில்
தொடங்கியதும்
உடன் படாத குழந்தைகள்
காதுகள் ஆசிரியரின்
விரல்களுக்கு மிகவும் பிடிக்கும்
என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக
புரியலானது
பள்ளிக்கு வெளியே
உடனேயே தெரு
எனக்கு பிடித்த பசுமைகள்
பள்ளிக்கு உள்ளே இருந்தன
கான்க்ரீட் உள்ளே
கரும் பலகைகள் என்
மனதில் பதிய ஆரம்பித்த
அந்த நாட்களின் வாசனை
இன்றும் என் நினைவலைகளில்
பரவ வல்லது
இன்னொன்றில்
நினைவுக்கு வருகின்றன
ஒன்றில்
பட்டாம் பூச்சியை
பார்த்துக் கொண்டே
கான்க்ரீட் பள்ளியை விட்டு
விலகி ஓடியது
ஞாபகம் வருகிறது
இந்தப் பள்ளி நான் படித்த
பள்ளி அல்லவே அல்ல
அன்னை ஆசிரியை என்பதால்
எனக்குக் கிடைத்த
சலுகை இது
இரண்டாவது பள்ளியில்
எனக்கு ஒழுங்காக
கான்க்ரீட் பள்ளியை
நோக்கி போவதற்கான
கன்னி முயற்சிகள் ஓரளவு
நிகழ்ந்தேறின
இதில் என்னை ஊக்குவிப்பதற்கு
கையில் வீட்டில் கடைந்தெடுத்த
வெண்ணெய் பாட்டியிடம் இருந்து
கிடைத்தது இப்பொழுது கூட அதன்
தடயம் கையில் இருக்கக்கூடுமோ என்று
நினைக்கத் தூண்டும் அளவுக்கு
ஞாபகம் இருக்கிறது
இங்கும் கான்க்ரீட் பள்ளிக்கு
வெளியே பசுமைகள் மனதில்
பளிச்சென்று தோன்றத்தான் செய்கின்றன
ஒரு பெரிய கிராமம் போலவேதான்
இருந்த சிறு நகரம் ஒன்றிற்கு
இடம் பெயர்ந்த போது
கான்க்ரீட் பள்ளியின் சத்தங்கள்
சூழ்ந்த சுவர்களால் பிரிக்கப்படாத
வகுப்புகள் வாழ்க்கையில்
தொடங்கியதும்
உடன் படாத குழந்தைகள்
காதுகள் ஆசிரியரின்
விரல்களுக்கு மிகவும் பிடிக்கும்
என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக
புரியலானது
பள்ளிக்கு வெளியே
உடனேயே தெரு
எனக்கு பிடித்த பசுமைகள்
பள்ளிக்கு உள்ளே இருந்தன
கான்க்ரீட் உள்ளே
கரும் பலகைகள் என்
மனதில் பதிய ஆரம்பித்த
அந்த நாட்களின் வாசனை
இன்றும் என் நினைவலைகளில்
பரவ வல்லது
இன்னொன்றில்
வியாழன், 7 மே, 2009
சில மௌனங்கள்
சில மௌனங்கள்
ஓசையை மிஞ்சி விடும்
மனதின் உள்
சலனம் ஏற்படுத்துவதில்
சிறு வயதில் சகோதரர்களுடன்
ஏற்பட்ட சண்டை சச்சரவு
பெரியவர்களின் மத்யச்தத்தில்
முடிவுக்கு வந்ததும் ஏற்படும்
மௌனம் ஒரு மாதிரி தான்
மனைவியிடம் விவாதம்
கசப்பாக முடிவது
ஒரு மௌனத்தில்
கொண்டு விட்டு விட்டால்
அன்று முழுதும் இந்த மௌனம்
ஒன்று போதும்
மனதை நாள் முழுக்க
அலைக்கழிக்க
ராத்திரி விவாதம் மகளோடு
ஏற்படாமல் இருந்தால்
தேவலை
அவள் முதுகைக் காட்ட
ஆறுதல் சொல்ல நினைத்தால்
எச்சரிக்கை உடனே வந்து விடும்
என்னதான் இருந்தாலும்
குழந்தையிடம் நீங்கள்
இப்படி பேசியிருக்க வேண்டாம் என்று
அதன் பின் வீட்டில் சூழும் மௌனமோ
கோரம்
நாள் முழுதும் குழந்தையுடன்
உறவாடும் அன்னை ஒருத்தி
சொன்னால் அது
தூங்கும் போது வீட்டில்
நிலவும் மௌனம்
ரொம்பவும் கோரமாக இருக்கிறது என்று
மரணத்துக்கு பிறகு
ஒரு வீட்டில் நிலவும்
மௌனம் தான் எவ்வளவு
கொடுமையானது
அதன் அழிவு பூர்வமான
சக்தியை சமன் செய்யத்தான்
எவ்வளவு ஒப்பாரி தேவையாக இருக்கிறது
விவாதம் இருக்க வேண்டிய
மேலாண்மைத் தளங்களில்
மௌனம் ஆளுமையின்
மரணத்தைப் போல் ஆகிறது
திரௌபதியின் வஸ்திரம் அபகரிக்கப்பட்ட
போது சபையில் நிலவிய மௌனம்
கொடுமையானது
ஆண் வர்க்கத்தை இன்றும் தலை
குனிய வைப்பது
கொலையுண்ட மக்களின்
சந்ததியினர் வருடக் கணக்கில்
சந்திக்கும் நீதி மன்றங்களின்
மௌனம்
ஒரு தேசத்தையே
பாதிக்கப்பட்ட சமூதத்தின் முன்
தலை குனிய வைத்துவிடுகிறது
அடித்தட்டு மக்களின்
மீது இழைக்கப் படும் கொடுமைகளுக்கு
அவர்கள் கட்டும் மௌனம்
அடிமைத்தனம் என்றால்
அதை எதிர்த்து மேல்தட்டு
மக்கள் மௌனம் சாதித்தால்
அது பேடித்தனம்
ஒரு அநியாயத்தை எதிர்த்து
பேசாது மௌனம் சாதிப்பது
அதற்கு துணை போவதற்கு
சமானம் ஆகும்
மௌனங்கள் அநேகமாக
நம்மை நமக்கு
அடையாளம் காட்டும்
கருவிகள் தான்
நன்றி சொல்லும் பொழுது
வார்த்தைகள் கிடைக்காமல்
போகும் மௌனம்
மகிழ்ச்சி மேலீட்டில்
கண்கள் நனைந்து தோன்றும்
மௌனம்
ஒவ்வொரு மௌனமும்
அழகு தான்
பிரிவில் தோன்றும் மௌனம்
காதலரை வாட்டி விடுகிறது
இன்றைய சாதனங்கள்
ஒலி வெள்ளத்தில் அமிழ்த்தினாலும்
அந்த வெள்ளம் வடிந்து
பெருகும் மௌனம்
அலாதி தான்
கொலையின் முடிவில்
கசியும் மௌனம்
கொலைகாரனையும்
கலங்க வைத்து விடும்
துரோகத்துக்கு பதில்
ஆவேசமான பேச்சு
கிடைத்தால் ஒரு விதத்தில்
அந்த துரோகம்
கையாளப்பட்டு விடும்
அதற்கு பதில் மௌனம்
கிடைத்தால் அது நரக வேதனை
தான் தரும்
ஆக மௌனங்களின் முன்
வார்த்தைகள் ஒன்றும் இல்லை
மனசாட்சி போல
உரத்த மௌனம் உலகில்
ஏதும் இல்லை
அதை பேச விடு
கூர்ந்து கேள்
உன் வார்த்தைகள் குறையும்
மௌனங்கள் மிகும்
அதனுடன் செயலும் திறனும்
மௌனம் பழகு
அது மனத்தின்
ஆத்மாவின் அழகு!
ஓசையை மிஞ்சி விடும்
மனதின் உள்
சலனம் ஏற்படுத்துவதில்
சிறு வயதில் சகோதரர்களுடன்
ஏற்பட்ட சண்டை சச்சரவு
பெரியவர்களின் மத்யச்தத்தில்
முடிவுக்கு வந்ததும் ஏற்படும்
மௌனம் ஒரு மாதிரி தான்
மனைவியிடம் விவாதம்
கசப்பாக முடிவது
ஒரு மௌனத்தில்
கொண்டு விட்டு விட்டால்
அன்று முழுதும் இந்த மௌனம்
ஒன்று போதும்
மனதை நாள் முழுக்க
அலைக்கழிக்க
ராத்திரி விவாதம் மகளோடு
ஏற்படாமல் இருந்தால்
தேவலை
அவள் முதுகைக் காட்ட
ஆறுதல் சொல்ல நினைத்தால்
எச்சரிக்கை உடனே வந்து விடும்
என்னதான் இருந்தாலும்
குழந்தையிடம் நீங்கள்
இப்படி பேசியிருக்க வேண்டாம் என்று
அதன் பின் வீட்டில் சூழும் மௌனமோ
கோரம்
நாள் முழுதும் குழந்தையுடன்
உறவாடும் அன்னை ஒருத்தி
சொன்னால் அது
தூங்கும் போது வீட்டில்
நிலவும் மௌனம்
ரொம்பவும் கோரமாக இருக்கிறது என்று
மரணத்துக்கு பிறகு
ஒரு வீட்டில் நிலவும்
மௌனம் தான் எவ்வளவு
கொடுமையானது
அதன் அழிவு பூர்வமான
சக்தியை சமன் செய்யத்தான்
எவ்வளவு ஒப்பாரி தேவையாக இருக்கிறது
விவாதம் இருக்க வேண்டிய
மேலாண்மைத் தளங்களில்
மௌனம் ஆளுமையின்
மரணத்தைப் போல் ஆகிறது
திரௌபதியின் வஸ்திரம் அபகரிக்கப்பட்ட
போது சபையில் நிலவிய மௌனம்
கொடுமையானது
ஆண் வர்க்கத்தை இன்றும் தலை
குனிய வைப்பது
கொலையுண்ட மக்களின்
சந்ததியினர் வருடக் கணக்கில்
சந்திக்கும் நீதி மன்றங்களின்
மௌனம்
ஒரு தேசத்தையே
பாதிக்கப்பட்ட சமூதத்தின் முன்
தலை குனிய வைத்துவிடுகிறது
அடித்தட்டு மக்களின்
மீது இழைக்கப் படும் கொடுமைகளுக்கு
அவர்கள் கட்டும் மௌனம்
அடிமைத்தனம் என்றால்
அதை எதிர்த்து மேல்தட்டு
மக்கள் மௌனம் சாதித்தால்
அது பேடித்தனம்
ஒரு அநியாயத்தை எதிர்த்து
பேசாது மௌனம் சாதிப்பது
அதற்கு துணை போவதற்கு
சமானம் ஆகும்
மௌனங்கள் அநேகமாக
நம்மை நமக்கு
அடையாளம் காட்டும்
கருவிகள் தான்
நன்றி சொல்லும் பொழுது
வார்த்தைகள் கிடைக்காமல்
போகும் மௌனம்
மகிழ்ச்சி மேலீட்டில்
கண்கள் நனைந்து தோன்றும்
மௌனம்
ஒவ்வொரு மௌனமும்
அழகு தான்
பிரிவில் தோன்றும் மௌனம்
காதலரை வாட்டி விடுகிறது
இன்றைய சாதனங்கள்
ஒலி வெள்ளத்தில் அமிழ்த்தினாலும்
அந்த வெள்ளம் வடிந்து
பெருகும் மௌனம்
அலாதி தான்
கொலையின் முடிவில்
கசியும் மௌனம்
கொலைகாரனையும்
கலங்க வைத்து விடும்
துரோகத்துக்கு பதில்
ஆவேசமான பேச்சு
கிடைத்தால் ஒரு விதத்தில்
அந்த துரோகம்
கையாளப்பட்டு விடும்
அதற்கு பதில் மௌனம்
கிடைத்தால் அது நரக வேதனை
தான் தரும்
ஆக மௌனங்களின் முன்
வார்த்தைகள் ஒன்றும் இல்லை
மனசாட்சி போல
உரத்த மௌனம் உலகில்
ஏதும் இல்லை
அதை பேச விடு
கூர்ந்து கேள்
உன் வார்த்தைகள் குறையும்
மௌனங்கள் மிகும்
அதனுடன் செயலும் திறனும்
மௌனம் பழகு
அது மனத்தின்
ஆத்மாவின் அழகு!
புதன், 6 மே, 2009
தமிழன் ஒரு கேள்விக் குறி?
யாம் அறிந்த முதுகுகளில்
தமிழன் முதுகு போல்
வளைவாவது எங்கும் காணோம்!
தமிழன் வளையும் போது
விடையும்
நிமிரும் போது
கேள்வியும் ஆகிற
வினோத பேர்வழி
ரசனை இவனுக்கு பிரதானம்
ஒரு நல்ல ரசிகனாக
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
தமிழன் எவ்வளவு தொலைவும்
செல்வான்
தலைமை இவனுக்கு பிரதானம்
தலைவன் என்று ஒருவரை
ஏற்றுக் கொண்டு விட்டால்
இவன் தலைவனுக்கு
தன் தலையையும்
கொடுக்கத் தவற மாட்டான்
இவன் வெளியுலகம்
முழுவதையும்
ரசித்து ஏற்பவன்
பிற மொழிகளை பேசுவான்
அவற்றில் தமிழ் தொனிப்பது
கேலிக்கு ஆளானாலும்
இவன் பொருட்படுத்துவதில்லை
தமிழனை ஆளுவது
பொதுவாக சுலபம்
பணியிடம் ஆனாலும் சரி
தன் மேலாளர் ஆனாலும் சரி
தன் நல்ல பெயர் கெடக் கூடாது
என்பதற்காக
உயிரையே விடுவான்
தமிழன் முதுகு
எல்லாருக்கும் பிடித்திருப்பதில்
ஆச்சர்யப் படுவதற்கு
ஒன்றும் இல்லை
தலைமையின் முரண்பாடுகள்
இவனுக்கு ராஜதந்திரத்தின் ரசனை
கால காலமும்
ஒரு தலைமை
அதற்காக ஒரு உயிர்
அதற்காக ஒரு உடல்
அதற்காக ஒரு பிறவி
ஒரு முதுகின் மேலே
ஒரு குடும்பம்
இத்தனை அழகில் ஒளிரும்
முதுகின் மேலே
உப்பு மூட்டை விளையாட
யாருக்குத் தான் ஆசை வராது?
இத்தனை கட்சிகள்
உதயம் ஆனதில் என்ன
பெரிய ஆச்சர்யம்?
ஏந்தி நிற்க இத்தனை
முதுகுகள் இருக்கையில்
ஏறி அமர தலைவர்கள்
குறைவாக இருந்தால் அது
தமிழனுக்கு எவ்வளவு
அவமானம்!
சுமை தாங்க ஏங்கும்
தமிழன் சுமைகள்
போதுமான அளவுக்கு
கிடைக்கா விட்டால்
அவன் வாழ்வு
அர்த்தம் கிடைக்காமல்
வீண் ஆகி விடாதோ?
இப்போது தமிழன்
ஆடும் உப்பு மூட்டை விளையாட்டுக்கு
நாற்பது நாற்பது என்று பெயரிடலாம்
அது என்ன இரண்டு நாற்பது என்கிறீர்கள்
நம் இலக்கியத்தில் நாற்பது
ஒரு அற்புதமான இடம் வகிக்கிறது
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
நம் இலக்கியத்தின் சான்றுகள்
இந்த பதிமூன்றாம் தேதி
தமிழகம்
புதியதொரு நாற்பதை படைக்குமா?
தமிழன் முதுகு நிமிர்ந்து
தமிழன் விடையில் இருந்து வெளிப் பட்டு
கேள்வி ஆவானா?
அவன் முதுகு வெறும் உப்பு மூட்டை அல்ல
அது சருக்கவும் செய்யலாம்
என்று உணர்த்துவாநோ நம் தமிழன்?
உணர்ச்சியில் உருகி விடாமல்
உண்மைகளைத் தேர்ந்து புரிந்து கொண்டும்
அடிமை தாழ்வு மனப் பான்மைகளில் இருந்து
விடுபட்டும்
தற்சார்புடனும் சுதந்திரத்துடனும்
வாக்குப் போட முடியுமா தமிழனால்?
சாது மிரண்டால்
காடு கொள்ளாது
தமிழன் மிரண்டால்
நாடு கொள்ளாது!
தமிழா நீ விழிக்க வேண்டும்
விழித்த உடனேயே
நிமிர்ந்து எழுந்திருக்க
வேண்டும்
சரிந்து விழும் ஒட்டுண்ணிகளை
புறக்கணித்து விட்டு
நேர் கொண்ட பார்வையுடன்
புதியதொரு
சகாப்தம் படைக்க வேண்டும்
அது தமிழ் பேசும் உலகம் முழுவதற்கும்
புதியதொரு நம்பிக்கையாக
மலர வேண்டும்
செய்வாயா தமிழா?
செய் அல்லது
செத்து மடி!
தமிழன் முதுகு போல்
வளைவாவது எங்கும் காணோம்!
தமிழன் வளையும் போது
விடையும்
நிமிரும் போது
கேள்வியும் ஆகிற
வினோத பேர்வழி
ரசனை இவனுக்கு பிரதானம்
ஒரு நல்ல ரசிகனாக
தன்னை வெளிப்படுத்திக் கொள்ள
தமிழன் எவ்வளவு தொலைவும்
செல்வான்
தலைமை இவனுக்கு பிரதானம்
தலைவன் என்று ஒருவரை
ஏற்றுக் கொண்டு விட்டால்
இவன் தலைவனுக்கு
தன் தலையையும்
கொடுக்கத் தவற மாட்டான்
இவன் வெளியுலகம்
முழுவதையும்
ரசித்து ஏற்பவன்
பிற மொழிகளை பேசுவான்
அவற்றில் தமிழ் தொனிப்பது
கேலிக்கு ஆளானாலும்
இவன் பொருட்படுத்துவதில்லை
தமிழனை ஆளுவது
பொதுவாக சுலபம்
பணியிடம் ஆனாலும் சரி
தன் மேலாளர் ஆனாலும் சரி
தன் நல்ல பெயர் கெடக் கூடாது
என்பதற்காக
உயிரையே விடுவான்
தமிழன் முதுகு
எல்லாருக்கும் பிடித்திருப்பதில்
ஆச்சர்யப் படுவதற்கு
ஒன்றும் இல்லை
தலைமையின் முரண்பாடுகள்
இவனுக்கு ராஜதந்திரத்தின் ரசனை
கால காலமும்
ஒரு தலைமை
அதற்காக ஒரு உயிர்
அதற்காக ஒரு உடல்
அதற்காக ஒரு பிறவி
ஒரு முதுகின் மேலே
ஒரு குடும்பம்
இத்தனை அழகில் ஒளிரும்
முதுகின் மேலே
உப்பு மூட்டை விளையாட
யாருக்குத் தான் ஆசை வராது?
இத்தனை கட்சிகள்
உதயம் ஆனதில் என்ன
பெரிய ஆச்சர்யம்?
ஏந்தி நிற்க இத்தனை
முதுகுகள் இருக்கையில்
ஏறி அமர தலைவர்கள்
குறைவாக இருந்தால் அது
தமிழனுக்கு எவ்வளவு
அவமானம்!
சுமை தாங்க ஏங்கும்
தமிழன் சுமைகள்
போதுமான அளவுக்கு
கிடைக்கா விட்டால்
அவன் வாழ்வு
அர்த்தம் கிடைக்காமல்
வீண் ஆகி விடாதோ?
இப்போது தமிழன்
ஆடும் உப்பு மூட்டை விளையாட்டுக்கு
நாற்பது நாற்பது என்று பெயரிடலாம்
அது என்ன இரண்டு நாற்பது என்கிறீர்கள்
நம் இலக்கியத்தில் நாற்பது
ஒரு அற்புதமான இடம் வகிக்கிறது
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
நம் இலக்கியத்தின் சான்றுகள்
இந்த பதிமூன்றாம் தேதி
தமிழகம்
புதியதொரு நாற்பதை படைக்குமா?
தமிழன் முதுகு நிமிர்ந்து
தமிழன் விடையில் இருந்து வெளிப் பட்டு
கேள்வி ஆவானா?
அவன் முதுகு வெறும் உப்பு மூட்டை அல்ல
அது சருக்கவும் செய்யலாம்
என்று உணர்த்துவாநோ நம் தமிழன்?
உணர்ச்சியில் உருகி விடாமல்
உண்மைகளைத் தேர்ந்து புரிந்து கொண்டும்
அடிமை தாழ்வு மனப் பான்மைகளில் இருந்து
விடுபட்டும்
தற்சார்புடனும் சுதந்திரத்துடனும்
வாக்குப் போட முடியுமா தமிழனால்?
சாது மிரண்டால்
காடு கொள்ளாது
தமிழன் மிரண்டால்
நாடு கொள்ளாது!
தமிழா நீ விழிக்க வேண்டும்
விழித்த உடனேயே
நிமிர்ந்து எழுந்திருக்க
வேண்டும்
சரிந்து விழும் ஒட்டுண்ணிகளை
புறக்கணித்து விட்டு
நேர் கொண்ட பார்வையுடன்
புதியதொரு
சகாப்தம் படைக்க வேண்டும்
அது தமிழ் பேசும் உலகம் முழுவதற்கும்
புதியதொரு நம்பிக்கையாக
மலர வேண்டும்
செய்வாயா தமிழா?
செய் அல்லது
செத்து மடி!
செவ்வாய், 5 மே, 2009
என் முதல் தபால் ஆபீஸ்
என் வாழ்க்கையில்
சில நிகழ்வுகளுக்கு
என்னை எனக்கு வளர்பவனாகக்
காட்டிய பெருமை உண்டு
நான் முதல் முதலாக
தபால் ஆபீஸ் சென்று
காசைக் கொடுத்து
தபால் தலை பெற்று
அம்மா கொடுத்த தபால்களைப்
பெட்டியில் போட்டது
என்னை எனக்கு வளர்பவனாகக்
காட்டிய முதல் தருணங்களில் ஒன்று
இந்த ஓர் அலுவலில்
நிறையப் பொறுப்பு இருந்தது
ஒரு பொது மக்கள் புழங்கும் இடத்தில்
யாரைக் கேட்டு எதைப் பெற வேண்டும்
கொடுத்த பணத்திற்கு தபால் தலை
கிடைத்ததா என்று பார்க்க வேண்டும்
சரியான அளவு தபால் தலைகளை
ஒவ்வொரு தபால் மீதும்
பசை தடவி பொருத்த வேண்டும்
இதற்கு இவ்வளவு என்று அம்மா
சொன்னது சரியாக ஞாபகம்
வர வேண்டும்
திரும்பி வருகையில் பாக்கி
தபால்தலைகளை
தொலைக்காமல் வீட்டுக்கு
கொண்டு வர வேண்டும்
பொறுப்பாக முடித்த
வேலைக்கு வீட்டுக்கு
வந்தவுடன் கிடைக்கும்
ஏதோ ஒரு சிறப்புச்
சிற்றுண்டி
கை கால் கழுவி
விட்டு சாப்பிடச்
செல்லும் பொழுது
தபால் அலுவலகத்தில்
திறந்தபடி மூக்கைத்
திணறடித்த
பசை நாற்றம்
ஏனோ கையை விட்டு நீக்கத்
தயக்கம் ஒன்று வந்து போகும்
ஏதோ வளர்வதைக் குறைத்து விடும் போல
சில நிகழ்வுகளுக்கு
என்னை எனக்கு வளர்பவனாகக்
காட்டிய பெருமை உண்டு
நான் முதல் முதலாக
தபால் ஆபீஸ் சென்று
காசைக் கொடுத்து
தபால் தலை பெற்று
அம்மா கொடுத்த தபால்களைப்
பெட்டியில் போட்டது
என்னை எனக்கு வளர்பவனாகக்
காட்டிய முதல் தருணங்களில் ஒன்று
இந்த ஓர் அலுவலில்
நிறையப் பொறுப்பு இருந்தது
ஒரு பொது மக்கள் புழங்கும் இடத்தில்
யாரைக் கேட்டு எதைப் பெற வேண்டும்
கொடுத்த பணத்திற்கு தபால் தலை
கிடைத்ததா என்று பார்க்க வேண்டும்
சரியான அளவு தபால் தலைகளை
ஒவ்வொரு தபால் மீதும்
பசை தடவி பொருத்த வேண்டும்
இதற்கு இவ்வளவு என்று அம்மா
சொன்னது சரியாக ஞாபகம்
வர வேண்டும்
திரும்பி வருகையில் பாக்கி
தபால்தலைகளை
தொலைக்காமல் வீட்டுக்கு
கொண்டு வர வேண்டும்
பொறுப்பாக முடித்த
வேலைக்கு வீட்டுக்கு
வந்தவுடன் கிடைக்கும்
ஏதோ ஒரு சிறப்புச்
சிற்றுண்டி
கை கால் கழுவி
விட்டு சாப்பிடச்
செல்லும் பொழுது
தபால் அலுவலகத்தில்
திறந்தபடி மூக்கைத்
திணறடித்த
பசை நாற்றம்
ஏனோ கையை விட்டு நீக்கத்
தயக்கம் ஒன்று வந்து போகும்
ஏதோ வளர்வதைக் குறைத்து விடும் போல
திங்கள், 4 மே, 2009
என் முகவரிகள்
நேற்றின் முகவரிகள் இன்னும் என் டயரியில்
என் டயரிகள் வீட்டின் ரகசிய அரண்களுக்கு
இடம் மாறி உயிர் பிழைக்கும்
என் நேற்றின் முகவரிகள் என்னிடம்
இன்றும் உள்ளன
இன்னும் எனது தபால் கார்டுகளுக்கு
நலமரிய ஆவல் இந்த
முகவரிகளுக்குள் இந்த டயரிகளைப்
போலவே எங்கோ புதைந்திருக்கின்றன
நானும் இந்த வலைகளில் திரியும்
போதெல்லாம்
நினைப்பதுண்டு
என் வலைக்கவிதைகளை
கார்டுகளில்
எழுதி இந்த முகவரிகளுக்கு அனுப்புவதற்கு
ஏன் இந்த கூகுல் ஒரு வழி செய்யக்கூடாது
சுவர்களின் வழியே நுழைந்து
வலை பிடிக்கும் இந்த மீனவனுக்கு
என் டயரிகள் என்ன பிரமாதம்?
என் டயரிகளும் முகவரிகளும் இன்னும்
சுவாசத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன
வலையில் விழத்
தவித்தபடி
என் டயரிகள் வீட்டின் ரகசிய அரண்களுக்கு
இடம் மாறி உயிர் பிழைக்கும்
என் நேற்றின் முகவரிகள் என்னிடம்
இன்றும் உள்ளன
இன்னும் எனது தபால் கார்டுகளுக்கு
நலமரிய ஆவல் இந்த
முகவரிகளுக்குள் இந்த டயரிகளைப்
போலவே எங்கோ புதைந்திருக்கின்றன
நானும் இந்த வலைகளில் திரியும்
போதெல்லாம்
நினைப்பதுண்டு
என் வலைக்கவிதைகளை
கார்டுகளில்
எழுதி இந்த முகவரிகளுக்கு அனுப்புவதற்கு
ஏன் இந்த கூகுல் ஒரு வழி செய்யக்கூடாது
சுவர்களின் வழியே நுழைந்து
வலை பிடிக்கும் இந்த மீனவனுக்கு
என் டயரிகள் என்ன பிரமாதம்?
என் டயரிகளும் முகவரிகளும் இன்னும்
சுவாசத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன
வலையில் விழத்
தவித்தபடி
ஞாயிறு, 3 மே, 2009
அட்சராப்யாஸம்
இந்த வலை ஸ்லேட்டு
எனக்குக்கிடைத்த
இந்த நாள் என் வாழ்வின்
ஒரு மகத்தான நாள்.
இந்த நாள் தான் நான்
வலையில்
தமிழில்
அட்சராப்யாசம்
செய்த நாள், இந்த பிஞ்சு
விரல்களை என்
தந்தை பின் புலத்திலிருந்து
இயக்கியது போல ஒரு
பிரமை
இப்போது தான் அவரது கன்னி முயற்சி
'செங்கரும்பின்' தலையங்கம்
ஒன்றை
அச்சகம் வரை கொடுத்து
அவரிடம் ஐம்பது பைசா
இனாம் பெற்றது போல் இருக்கிறது!
தமிழ் நதி என் வாழ்வில் கோடை கால
காவிரி போலே சுருங்கி விட்டாள் என்று
நான் வாடிப்போய் இருக்கும் பொழுது
என் கைகள் கூகிள் செய்து
மணல் தோண்ட,
கிடைத்தது தமிழமிழ்து.
கூகிள் தமிழை சொல்லிக்கொடுத்த
நண்பன் ராஜ்க்கு தமிழுள்ளவரையும் நன்றிக்
கடன் பட்டிருக்கிறேன்!
சாத்தமுது, கறியமுது என்றெல்லாம்
வைணவர்கள் குறிப்பிடும் உணவு வகைகள்
போல் அந்த திருக்கண்ணமுது போல் தமிழமிழ்து
தமிழ் என்றாலே அது அமிழ்தன்றோ?
அது என்ன தமிழ் அமிழ்து?
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
அமிழ்து ஆவது எங்கும் இல்லை!
அமிழ்து எது? அமிழ்து தமிழ்!
தமிழ் எது? தமிழ் அமிழ்து!
ஒவ்வொரு தினமும்
வலையில் வலம் வர
தமிழ் அன்னை தயை
புரிய வேண்டும்!
அன்புடன்,
தமிழ் அமிழ்து
Y
எனக்குக்கிடைத்த
இந்த நாள் என் வாழ்வின்
ஒரு மகத்தான நாள்.
இந்த நாள் தான் நான்
வலையில்
தமிழில்
அட்சராப்யாசம்
செய்த நாள், இந்த பிஞ்சு
விரல்களை என்
தந்தை பின் புலத்திலிருந்து
இயக்கியது போல ஒரு
பிரமை
இப்போது தான் அவரது கன்னி முயற்சி
'செங்கரும்பின்' தலையங்கம்
ஒன்றை
அச்சகம் வரை கொடுத்து
அவரிடம் ஐம்பது பைசா
இனாம் பெற்றது போல் இருக்கிறது!
தமிழ் நதி என் வாழ்வில் கோடை கால
காவிரி போலே சுருங்கி விட்டாள் என்று
நான் வாடிப்போய் இருக்கும் பொழுது
என் கைகள் கூகிள் செய்து
மணல் தோண்ட,
கிடைத்தது தமிழமிழ்து.
கூகிள் தமிழை சொல்லிக்கொடுத்த
நண்பன் ராஜ்க்கு தமிழுள்ளவரையும் நன்றிக்
கடன் பட்டிருக்கிறேன்!
சாத்தமுது, கறியமுது என்றெல்லாம்
வைணவர்கள் குறிப்பிடும் உணவு வகைகள்
போல் அந்த திருக்கண்ணமுது போல் தமிழமிழ்து
தமிழ் என்றாலே அது அமிழ்தன்றோ?
அது என்ன தமிழ் அமிழ்து?
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
அமிழ்து ஆவது எங்கும் இல்லை!
அமிழ்து எது? அமிழ்து தமிழ்!
தமிழ் எது? தமிழ் அமிழ்து!
ஒவ்வொரு தினமும்
வலையில் வலம் வர
தமிழ் அன்னை தயை
புரிய வேண்டும்!
அன்புடன்,
தமிழ் அமிழ்து
Y
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)