உன் அகம்
புது வரவால் புது உறவுகளால்
விரிந்ததில் பூரித்திருக்கும்
அதன் வரவேற்புகளில்
உன் மீது இருக்கும் உற்சாகம்
அவள் மீதும்
அதே போல இருக்க வேண்டும்
என்று நீ நினைத்தாலும்
ஆணாதிக்க சமூகத்தின்
ஆர்ப்பரிப்புகளில் அது சாத்தியம் இல்லை
அவள் மீது உற்சாகம் இருந்தாலும்
ஒரு சில பயங்கள்
ஒரு சில சந்தேகங்கள்
ஒரு சில எச்சரிக்கைகள்
இருபக்கமும் கலந்த உற்சாகமே அது
உன் அகம்
ஒரு மாறுதலை
எப்படி எடுத்துக் கொண்டு
செயல் படுகிறது என்பதில்
உனக்கு கவனம் தேவை
உன் வாழ்க்கை
இது வரை உன் அகத்தின்
உள்ளும் புறமும்
பற்பல சுதந்திரங்களுடன்
அமைந்திருந்திருக்கும்
அந்த அகம் இப்போது மாறும்
அகம் முழுக்கவும்
உன்னை விடவும்
உன் மீது உரிமைகளை
சரளமாக கொண்டாடக்கூடிய
ஒவ்வொருவரை விடவும்
மாறுதல்களின் மேலாண்மை
அவளிடம் அதிகம் கேட்கப்படும்
விளைவுகள் அவள் பெயரில்
எழுதப்படும்
எனவே அவள் உன்னிடம்
பகிர்ந்து கொள்ள வேண்டிய
மாறுதலின் இடையில் தேறுதல்
மாறுதலின் இடையிடையே சோருதல்
அனேகமாக இருக்கும்
உன் காதுகளை தயாராக
வைத்திருப்பது மிக அவசியம்
இது ஒன்றும் இனிய காதல் உரையாடல் அல்ல
பொறுமையுடன் அலசி ஆராய்ந்து
இருவரும் இரு பக்கங்களையும்
பார்க்க வேண்டிய பரிசோதனை சாலை
உன்னைப் போல்
நினைத்த பொழுது
சொல்ல வேண்டியதை சொல்வது
அவளால் இயலாதது
அவளால் இயலும் என்றால்
மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள
அதனால் உட்படவும்
உன்னாலும் புரிந்து கொள்ள முடியாதது
இது சொல்ல நிறைய யாரிடம்
உள்ளதோ அவரிடம்
சொல்ல தயக்கமும்
தடையும் மிகும் ஒரு காலம்
காலப் போக்கில் இது மாறும்
ஆனால் இந்த தடைகளை நீ
நீக்க மாட்டாய் எனில்
நீக்காத ஒரு பழி உன்னைப் பார்த்து
ஏதோ ஒரு வகையில் கணக்கு
தீர்க்க வந்த படி இருக்கும்!
பரிவுடன் கேட்கும் திறன்
முன் எப்பொழுதையும் விட உனக்கு
இப்போது தான் தேவை
நீ ஆண் - தேர்ந்தெடுப்பவன்
என்றொரு மாயை
திரை உன் கண்ணை மறைத்திருக்கும்
ஆண் மகனாக உன் தேர்ச்சிகள் இப்போது தான் ஆரம்பம்
உனக்கு முழுமையாக
தெரியாத உன் அகம்
உனக்கு மீண்டும் தெரியாமலே
மாறிக்கொண்டிருக்கும் உன் அகம்
உன்னை உனக்குக் காட்டும்
ஒரு புதிய கண்ணாடியுடன் உன் அகம்
உன் நேரம் உன் கவனம் உன் புரிதல்
இவற்றை முன் எப்பொழுதும் விட
இப்போது நாடும் உன் அகம்
நீ ஒரு புதியவனாக
அணுகி உணர வேண்டிய உன் அகம்
அறிவதன் சோதனைகள்
அத்தனையும் உன் மேஜை மீது
குவிக்கும் உன் அகம்
உன் அகம் மீண்டும் அறி
அவன் அப்படி
அவன் இப்படி
என்று உன்னைப் பற்றிய
சித்திரங்கள் வரையப்படும்
இவை உன்னைப் பற்றிய
கேலி சித்திரம் ஆகாது
உன்னைக் காத்துக்
கொள்வது நல்லது
இந்த புதிய அகத்தில் உனக்கு
பெரிய பொறுப்பு
உன் வளர்ச்சியின் கதை
உன் நன்றிக்கு உரியவர்கள்
உன்னிடம் உரிமை
எடுத்துக் கொள்ளும் பொழுது
உன்னை மகிழ்விப்பவர்கள்
இவை எல்லாம்
உன் புதியவளுக்கு
நீ சொல்லிட அவளின்
மாற்றத்தின் மீதுள்ள
மேலாண்மை இன்னும் சிறக்கும்
உன்னைப் பற்றிய அறிவு
உன் வேலையோ கல்வியோ
உன் சமூக அங்கீகாரமோ அல்ல
உன்னை பற்றிய அறிவு
உன் மதிப்பீடுகளைப் பற்றியது
அவை
யூகத்திற்கு உட்பட்டவையோ
வியூகத்திற்கு உட்பட்டவையோ அல்ல
முதலில்
நீ அறிவாயா உன் மதிப்பீடுகளை?
உன் பொறுப்புகள் பல மடங்கு விரிகின்றன
இது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற கணிதம் அல்ல
இரண்டு பரம்பரைகளின் சந்திப்பில் நிகழும்
மிகப் பெரிய ரசாயனம்
உன் சமூகம் திடீரென பல்கி
உன் அடையாளங்களை
கேட்கும் காலம் இது
நீ நினைத்திருந்தது போல
இதற்கு தயாராக இருந்திருக்க மாட்டாய்
அது மட்டும் நிச்சயம்
நீயே இதை உணர்வாய்
சம்பந்தம் பேசாத
சமூக விதிகள்
மதிப்பீடுகள்
உணர்ச்சி ஒப்பந்தங்கள்
அத்தனையும்
உனக்காக
திருமணம் முடியட்டும் என்று
காத்திருந்ததை நீ உணரும் பொழுது
உன் அகம் அந்த
அடையாளங்களில் ஒன்று தான்
மாறுதலின் அஸ்திவாரம்
உன் பலமான முதலீட்டைக்
கேட்கும் காலம் இது
அவள் பிரிந்த அன்னையை
உன்னிலும்
அருகில் இல்லாத பொழுது
எண்ணி வாடும் தந்தையை
உன்னிலும்
காண வேண்டும்
இது ஒரு முதலீடு
கணவன் என்று உன்னை
உணரும் முன்
நண்பனாக உணர வேண்டும்
இது இன்னொரு முதலீடு
அச்சங்களை
பேசாமலேயே அகற்றும்
அங்க மொழி
உன்னிடம் இருக்க வேண்டும்
உன் அகம் ஒரே ஒரு உறவின் வருகையில்
இவ்வளவு மாற்றம் காண்கிறது
உன் மாறிய அகம் அறி
அவள் அகத்தின் பாதிப்புகள்
அவள் வாழ்வில் இருந்து
முழுக்க நீங்க வேண்டியது இல்லை
உண்மையில் நீங்க கூடியது இல்லை
அவள் வீட்டு அருகில்
எப்பொழுதும் செழிப்புடன் இருக்கும்
இடம் பெயர்ந்ததில்
இன்று அவளுக்குக் கிடைக்க அருகிய
கோவில், பூங்கா, நட்பு,
பூக்கள், இசை ஒவ்வொன்றும்
உனக்கு தெரிந்திருக்க வேண்டும்
அவள் அகம் பற்றிய அறிவு தான்
அவள் பற்றிய அறிவு
ரத்தமும் சதையும் நுகர்வுகளும்
தாண்டிய ஜீவனாக அவளை அறிய
அவள் அகம் அறி
அவள் மீது உள்ள பாதிப்புகள்
ஒவ்வொன்றின் மூலப் பொருளும்
உன் வாழ்வில் ஏதோ ஒரு வகையில்
இடம் பெற வேண்டும் என்று அறி
கலைகள், இலக்கியம், நட்பு, சுற்றம்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு பொழுதும் அவை
இடம் பெறாமல் போகலாம்
ஆனால் அவற்றுக்கென்று ஒரு
பொழுது உண்டு
ஒன்றும் இல்லா விட்டாலும்
உங்கள் உரையாடலில்
அவற்றுக்கு ஓர் இடம் உண்டு
என்று அறி
அவள் அகம் அறிவது
அவள் வீடு சென்று
வருவதுடன் முடிவது அல்ல
தொடங்குவது
அவள் நட்பு என்பது
அவளைக் கடந்து
பற்பல காலங்களின்
போக்கில் வளர்ந்து
இன்று நிலைத்து விட்ட
ஒரு சிறிய
அவளுக்கு என்றே
உரித்தான சமூகத்தின் நட்பும் ஆனால்
ஓர் அலாதி முழுமை பெறுகிறது
அந்த அவளது மரியாதைக்கு உரிய சமூகம்
உன் மரியாதைக்கும் உரியது
அதில் ஒன்றும் ஆண் பெண் பேதங்கள் இல்லை
உன் நட்பு அவளுக்கு கிடைத்தது
அவளது ஒவ்வொரு நட்பையும் இழப்பதற்காக இல்லை
உன் முயற்சியில் ஒவ்வொரு நட்பும்
உங்கள் இருவரின் நட்பாகத் தொடர வேண்டும்
நட்புகள் அழிந்து விடக் கூடியவை
நீ அவள் அகம் அறியாத பொழுது
வளர்ந்த நட்புகள் முழுக்க முழுக்க
அவள் வாழ்வில் இருந்து நீங்குவது
உன் புதிய நட்புக்காக எப்படி இருக்க முடியும்
நண்பனே, வெற்றிடத்தில் ஏது நட்பு?
உன் உறவு ஒவ்வொன்றும்
நட்பாகும் பொழுது உன்
வாழ்வில் படரும் பசுமை
ஒரு மகத்தான இறை அருள்
அந்த இறை அருள் சூழும்
அகம் அறி!
வியாழன், 20 ஆகஸ்ட், 2009
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
அகம் அறி
நீ வாழ்ந்த அகம்
உன்னில் ஊறியது
உனக்காக தன்னில்
மாறுதல்களை ஏற்கும்
உன் வருகைக்காகவே
காத்திருக்கும்
உன் பொருள்களை
அவை அவை
இருக்க வேண்டிய இடத்தில்
நீ வைக்கா விட்டாலும்
யாராவது எடுத்து வைப்பார்கள்
உனக்கு தெரிவிப்பார்கள்
உன்னை தெரிவிக்க மாட்டார்கள்
அது உன் அகம்
நீ போனதிலிருந்து உனக்காக
துடிப்புகளின் தனிமையை
ஒரு விதமாக ஏற்றுக்கொள்ள
முயலும் உன் அகம்
நீ அறிந்தாலும் அறிய
மறந்தாலும்
என்றும் உன் அகம்
நீ அறிந்தே கொள்ள
வேண்டியது உன்
புது அகம்
புகு அகம்
உன் கணவனை
அறிந்து கொள்ள
உதவுவதே
இந்த அகம் தான்
நீ காதலித்தே
மணந்து கொண்டிருந்தாலும்
உன் அகம் தான்
அவன் வாழும் வகை காட்டும்
ஒரு விதத்தில்
காதலில் அறிந்து கொண்டவனை
மறந்து
இந்த அகம் உடையானாக
அறிந்து கொள்வது உனக்கு
புதுமையும் வலிமையும்
ஒரு சேரத்தரும் அனுபவம்
வீட்டுக்கு இரு முகங்கள்
ஒரு புறம்
ஒரு அகம்
எப்பொழுதும் உண்டு
இரண்டும் அறிய வேண்டிய முகங்கள்
உள்ளுணர்வின் விழிப்பு
ஒன்று இருந்தால் போதும்
ஒவ்வொரு விஷயமும்
பார்வையில் படும்
தகவல்களாக
தேவைகளாக
தவிப்புகளாக
எதிர்பார்ப்புகளாக
ஒரு வீட்டின்
செங்கல்களையும்
சிமெண்டையும்
ஓடுகளையும்
கடந்த அகம்
அறியப் பட வேண்டியதொன்று
அகத்தின் ஒரு
மகத்தான தோற்றம்
காலத்தின் பரிமாணத்தின் மூலம்
கிடைக்கும்
வீட்டில் வாழ்ந்த தலைமுறைகள்
வீட்டில் வளர்ந்த உறவுகள்
வீட்டை வாழ்த்திய சுற்றங்கள்
வீட்டைத் தேடி வரும் நட்புகள்
காலத்தின் கோலங்களாக பலவும்
காலம் காலமாக சிலவும் என்று
ஒரு பரிணாமம்
இவற்றை உணர நீ
போட்டோ ஆல்பங்கள் இலிருந்து
வீட்டின் பல அறைகளில்
உறைந்த காலத் துளிகளாக
உறையும் போட்டோக்கள் வரை
புதிய உறைவிடம்
பகிரப்படும் சுய சரிதைகளில் இருந்து
பகிரப்பட மறந்த வாழ்க்கைகள் வரை என்று
எவ்வளவோ அறியக் கிடைக்கும்
காலத்தின் வேறு
ஒரு கோணம்
தினசரி அலுவல்களின்
குடும்ப வாழ்க்கையின்
அன்றாட நெருக்கடிகளில்
நெருடல்களில்
புதைந்து இருக்கும்
இவற்றுடன் பழகாத
ஒரு புது உறவின்
பார்வைக்கு அந்த கோணம்
எளிதில் கிடைக்கக் கூடும்
இவற்றை
நேர்த்தியாகவும்
இன்னும் அழகாகவும்
எல்லோருக்கும் உற்சாகம்
கொடுப்பதாகவும்
செய்ய விரும்பிப்
பார்க்கும் பார்வைகளுக்கு
இந்த அகம்
அகத்தின் அடி நாதம்
ஒரு சில நாட்களில்
அத்து படியாகும்
ஒரு விதத்தில்
அவன் அகம் அறியும் முன்னர்
அகத்தின் அகம் அறிந்தால்
அவன் தலைவனாகாமல்
தொண்டன் ஆகி விடுவான்
தான் முழுமையாகவும்
தன் வேர்களின் பலத்தின்
முழு உணர்தல் ஒன்றுடனும்
அணுகப் பட்டதில்
அவனே அவன் அகம்
அறிவதில் ஒரு புத்துணர்வு பெறுவான்
அவன் வாழ்க்கையில்
இந்த திருமணம் சில
சலசலப்புகள் வரும்
என்ற ஒரு அச்சம் இருந்திருக்கும்
அவற்றை தன் குடும்பத்தினர்
எப்படி ஏற்றுக் கொள்வார்களோ
என்று அவனுக்குள் இருந்த
அச்சம் விலகி
அவன் ஒரு புதிய அத்தியாயம்
எல்லோருக்கும் இருக்கிறது
என்று உணரும் பொழுது
அது அவனுக்கும் ஒரு
புது அகமாக தோன்றும்
அந்த
அகம் அறி!
ஔஷதம் ஆகி நோய் தீர்
நான் சமீபத்தில் எழுதிய அவ்வை மன்னிப்பாராக
உண்மையில் புது மண மக்களுக்கு அறிவுரைஆக
நினைத்து எழுதியது
ஔ அன்று விட்டுப் போனது
இன்று எழுத வந்தது
ஔஷதம் ஆகி நோய் தீர்
உண்மையில் புது மண மக்களுக்கு அறிவுரைஆக
நினைத்து எழுதியது
ஔ அன்று விட்டுப் போனது
இன்று எழுத வந்தது
ஔஷதம் ஆகி நோய் தீர்
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
இந்த சுதந்திரங்கள்
நம் நாடு
பன் முகம் கொண்டது
பல மொழிகள்
இனங்கள்
இன்னும் எத்தனையோ
வேறுபாடுகள்
சுதந்திரம் உட்பட
அறுபத்தி இரண்டு
ஆண்டுகளில் நம்
சுதந்திரம்
ஒன்று நூறாகி ஆயிரமாகப்
பல்கிப் பெருகி விட்டது
நம் கொண்டாட்டம் ஒன்று போல
இருக்கலாம்
சுதந்திரங்கள் வேறு
எல்லோருக்கும் ஒரு தாகம்
கிடைப்பது ஒரே மாதிரியான
நீர் அல்லவே?
அது போலத்தான்
ஆளுக்கு ஒரு சுதந்திரம்
ஆணுக்கு ஒரு சுதந்திரம்
இன்றும் உண்டு
பெண்ணுக்கு வேறு ஒன்று உண்டு
ஆண்டான் அடிமை இன்றும் உண்டு
வெவ்வேறு சுதந்திரங்கள்
ஜாதி அடிப்படையில்
சுதந்திரங்கள்
பங்கீடுகள் வாக்கு
வங்கிகள் -
சுதந்திரங்கள் பல வகையாகப்
பிரித்துக்கொடுக்கப்பட்டிருப்பது
மறுக்க முடியாத
இனி மாற்ற முடியாத ஒரு
நிஜம்
இந்த சுதந்திரங்களின்
முன்னே
குடும்ப ஆதாரங்கள்
அசைய ஆரம்பித்து இருப்பதும்
இன்னொரு நிஜம்
ஒன்று பெற்றோர் தோள்களில்
உலவும் சுதந்திரம்
இன்னொன்று பெற்றோர்களின்
மதிப்பீடுகளை மறுதலிக்கும்
சுதந்திரம்
சுதந்திரங்கள்
ஆயிரக் கணக்கில்
நடம் ஆடும் இந்தியா
வீட்டுக்குள்
வந்தால்
அது ஒரு வகையான
கலாசார யுத்தம் தான்
பலர் தோற்றும்
கொண்டாடும்
சிலர் சுதந்திரங்களின்
ரங்கோலியால்
மற்றவர் துயரங்கள்
வண்ணங்கள் போல்
தோன்றும்
மகத்தான வாழ்வு தான்
ஆயினும்
நான் சுதந்திரம்
கொண்டாடுவேன்
எனக்கு தெரியும்
இன்று
பல ஏழைக் குடும்பங்களில்
ஒரு புது குதூகலம் உண்டு
நாடு முழுதும்
சாலைகள் எங்கெங்கும்
மூவண்ணக் கொடிகள்
விற்றதில் ஒரு
சின்ன சில்லறை சுதந்திரம்
பல குடும்பங்களுக்கும்
குழந்தைகளுக்கும் உண்டு
ஒரு நாள்
ஒரு பொழுது
இவர்கள் வாழ்வில்
அர்த்தம் கொடுத்தாலும்
இவை
போற்றப் படவேண்டியவையே
பன் முகம் கொண்டது
பல மொழிகள்
இனங்கள்
இன்னும் எத்தனையோ
வேறுபாடுகள்
சுதந்திரம் உட்பட
அறுபத்தி இரண்டு
ஆண்டுகளில் நம்
சுதந்திரம்
ஒன்று நூறாகி ஆயிரமாகப்
பல்கிப் பெருகி விட்டது
நம் கொண்டாட்டம் ஒன்று போல
இருக்கலாம்
சுதந்திரங்கள் வேறு
எல்லோருக்கும் ஒரு தாகம்
கிடைப்பது ஒரே மாதிரியான
நீர் அல்லவே?
அது போலத்தான்
ஆளுக்கு ஒரு சுதந்திரம்
ஆணுக்கு ஒரு சுதந்திரம்
இன்றும் உண்டு
பெண்ணுக்கு வேறு ஒன்று உண்டு
ஆண்டான் அடிமை இன்றும் உண்டு
வெவ்வேறு சுதந்திரங்கள்
ஜாதி அடிப்படையில்
சுதந்திரங்கள்
பங்கீடுகள் வாக்கு
வங்கிகள் -
சுதந்திரங்கள் பல வகையாகப்
பிரித்துக்கொடுக்கப்பட்டிருப்பது
மறுக்க முடியாத
இனி மாற்ற முடியாத ஒரு
நிஜம்
இந்த சுதந்திரங்களின்
முன்னே
குடும்ப ஆதாரங்கள்
அசைய ஆரம்பித்து இருப்பதும்
இன்னொரு நிஜம்
ஒன்று பெற்றோர் தோள்களில்
உலவும் சுதந்திரம்
இன்னொன்று பெற்றோர்களின்
மதிப்பீடுகளை மறுதலிக்கும்
சுதந்திரம்
சுதந்திரங்கள்
ஆயிரக் கணக்கில்
நடம் ஆடும் இந்தியா
வீட்டுக்குள்
வந்தால்
அது ஒரு வகையான
கலாசார யுத்தம் தான்
பலர் தோற்றும்
கொண்டாடும்
சிலர் சுதந்திரங்களின்
ரங்கோலியால்
மற்றவர் துயரங்கள்
வண்ணங்கள் போல்
தோன்றும்
மகத்தான வாழ்வு தான்
ஆயினும்
நான் சுதந்திரம்
கொண்டாடுவேன்
எனக்கு தெரியும்
இன்று
பல ஏழைக் குடும்பங்களில்
ஒரு புது குதூகலம் உண்டு
நாடு முழுதும்
சாலைகள் எங்கெங்கும்
மூவண்ணக் கொடிகள்
விற்றதில் ஒரு
சின்ன சில்லறை சுதந்திரம்
பல குடும்பங்களுக்கும்
குழந்தைகளுக்கும் உண்டு
ஒரு நாள்
ஒரு பொழுது
இவர்கள் வாழ்வில்
அர்த்தம் கொடுத்தாலும்
இவை
போற்றப் படவேண்டியவையே
கண்ணா உன் பாத கமலங்கள்
கோகுலாஷ்டமி அன்று
வராக வைரசின்
உயிரடியையும் மீறி நடந்த
உரியடிகள் கண்டோம்!
என் வாழ்வின்
வெவ்வேறு பருவங்களில்
வளர் பிறைகளில்
முழு நிலவாகத்
திகழ்ந்திருக்கிறது
கோகுலாஷ்டமி
கடவுளை அறிவதற்கு முன்
கலைகளை அறிந்திருக்கிறேன்
மார்கழி என்றால் கோலங்கள்
அஷ்டமி என்றால் அழகிய பாதங்கள்
என் வளரும் பருவத்தில்
அரிசிப் பஞ்சம் ஊரையே
அழுத்தப் பார்த்திருக்கிறேன்
பஞ்சத்தின் விளைவாக
வள்ளிக்கிழங்குகளும்
வேறு உணவுகளும்
உலா வரப் பார்த்திருக்கிறேன்
'எலிக் கரி தின்னச்சொன்ன
காங்கிரஸ் ஆட்சி தேவையா'
என்ற கோஷம் எங்கள் வீட்டு
சுவரில் எழுதப்படப்
பார்த்திருக்கிறேன்
முதிய அறுபதுகளில்
தார் பூசிய தபால் நிலையப் பலகைகளும்
கருப்பு சிவப்பு கொடிகளும்
இத்தகைய சுவரிலக்கியங்களும்
பல்கிப் பரவியது ஒரு
காலம் தன்னை இழந்து
வேறொரு காலத்துக்கு
வழிவிட்டதொரு காட்சி
வீடு முழுதும்
சின்னச்சின்ன பாதங்கள்
கொஞ்சிக் குழைந்து
நடமாடிப் பின்
சமையல் அறைக்கு அடுத்த
பூஜை அறையில் சென்று
சேராத,
வண்ணங்களிலும், வாசனையிலும்
திணறடிக்கும் வகை வகையான
சுபிட்சத்தின் பேரழகு கூடிய
பாரம்பர்யத்தின் இன்னொரு முகமாகப்
பரவி பிரமிக்க வைத்த
இனிப்புகளும் இன்ன பிறவும் வெண்ணையும்
இல்லாத கோகுலாஷ்டமியை
நான் பார்த்ததே இல்லை
எல்லாவற்றையும் விட
மனதில் இன்றும் இருப்பது
நேர் கோடுகளுக்குள் அடங்காத
அந்த குட்டிப்
பாதங்கள்
சில வீடுகளில்
எட்டின் மேல்
விரல் முளைத்திருக்கும்
பாதங்களுக்கு பதில்
எட்டுகள் புலப்படும்
எங்கள் வீட்டில்
தமக்கை தன் உள்ளங்கை
குவித்து வரைந்த
அந்த குட்டிப் பாதங்கள்
எங்களை
ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்
கண்ணன் வந்து
எங்கெங்கும் ஓடி
ஒளிந்து கொள்ள
ஓர் இடம்
சென்று சேர்ந்தது போல
அதில் ஒரு தோற்றம் இருக்கும்
அடுப்பின் அக்னி
சற்று இளைப்பாரியிருக்கலாம்
அக்னிக்கு அசராத எங்கள் பாட்டி
ஓயாது செய்திருப்பாள்
ஒரு நூறு பண்டங்கள்
இந்தக் கண்ணனுக்கு
பாட்டிக்கு கண்ணன்
பிரத்யட்சம் ஆவதோ
பேத்தி
பேரன்களாகவே
அந்த பண்டங்களில்
நா ஊறிய சுவை
மனதை சுண்டி இழுத்த வாசனை
எங்கள் கடந்த காலத்தில்
உறைந்து போன
மீண்டு பெற முடியாத
பிள்ளைப் பருவ அனுபவங்கள்
பண்டங்கள் எங்களைச்
சுற்றி வரும்
நாங்கள் அவற்றைச்
சுற்றி வருவோம்
ஒரு வாரம் ஆனாலும்
இந்த கண்ணன் அமுது
எங்கள் வாழ்க்கையின்
தினசரி அங்கமாக ஜொலிக்கும்
அட்சய பாத்திரம்
விட்டு விட்டுப் போயிருப்பான்!
மெல்ல மெல்ல மறையும்
அந்த குட்டிப் பாதங்கள்
நெஞ்சின் உள்ளே
சொல்லத் தெரியாத
சோகம் ஒன்றையும்
வெற்றிடம் ஒன்றையும்
விட்டுச் செல்லும்
கண்ணா உன்
பாத கமலங்கள்
கோபிகைகளும்
ராதையும்
மீராவும்
அறியாத எங்கள் எளிய
முகவரிகளில்
எப்போது வேண்டுமானாலும்
வருவேன்
அழைக்க வேண்டியதில்லை
என்று சொல்லி விட்டுச் செல்லும்
வராக வைரசின்
உயிரடியையும் மீறி நடந்த
உரியடிகள் கண்டோம்!
என் வாழ்வின்
வெவ்வேறு பருவங்களில்
வளர் பிறைகளில்
முழு நிலவாகத்
திகழ்ந்திருக்கிறது
கோகுலாஷ்டமி
கடவுளை அறிவதற்கு முன்
கலைகளை அறிந்திருக்கிறேன்
மார்கழி என்றால் கோலங்கள்
அஷ்டமி என்றால் அழகிய பாதங்கள்
என் வளரும் பருவத்தில்
அரிசிப் பஞ்சம் ஊரையே
அழுத்தப் பார்த்திருக்கிறேன்
பஞ்சத்தின் விளைவாக
வள்ளிக்கிழங்குகளும்
வேறு உணவுகளும்
உலா வரப் பார்த்திருக்கிறேன்
'எலிக் கரி தின்னச்சொன்ன
காங்கிரஸ் ஆட்சி தேவையா'
என்ற கோஷம் எங்கள் வீட்டு
சுவரில் எழுதப்படப்
பார்த்திருக்கிறேன்
முதிய அறுபதுகளில்
தார் பூசிய தபால் நிலையப் பலகைகளும்
கருப்பு சிவப்பு கொடிகளும்
இத்தகைய சுவரிலக்கியங்களும்
பல்கிப் பரவியது ஒரு
காலம் தன்னை இழந்து
வேறொரு காலத்துக்கு
வழிவிட்டதொரு காட்சி
வீடு முழுதும்
சின்னச்சின்ன பாதங்கள்
கொஞ்சிக் குழைந்து
நடமாடிப் பின்
சமையல் அறைக்கு அடுத்த
பூஜை அறையில் சென்று
சேராத,
வண்ணங்களிலும், வாசனையிலும்
திணறடிக்கும் வகை வகையான
சுபிட்சத்தின் பேரழகு கூடிய
பாரம்பர்யத்தின் இன்னொரு முகமாகப்
பரவி பிரமிக்க வைத்த
இனிப்புகளும் இன்ன பிறவும் வெண்ணையும்
இல்லாத கோகுலாஷ்டமியை
நான் பார்த்ததே இல்லை
எல்லாவற்றையும் விட
மனதில் இன்றும் இருப்பது
நேர் கோடுகளுக்குள் அடங்காத
அந்த குட்டிப்
பாதங்கள்
சில வீடுகளில்
எட்டின் மேல்
விரல் முளைத்திருக்கும்
பாதங்களுக்கு பதில்
எட்டுகள் புலப்படும்
எங்கள் வீட்டில்
தமக்கை தன் உள்ளங்கை
குவித்து வரைந்த
அந்த குட்டிப் பாதங்கள்
எங்களை
ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்
கண்ணன் வந்து
எங்கெங்கும் ஓடி
ஒளிந்து கொள்ள
ஓர் இடம்
சென்று சேர்ந்தது போல
அதில் ஒரு தோற்றம் இருக்கும்
அடுப்பின் அக்னி
சற்று இளைப்பாரியிருக்கலாம்
அக்னிக்கு அசராத எங்கள் பாட்டி
ஓயாது செய்திருப்பாள்
ஒரு நூறு பண்டங்கள்
இந்தக் கண்ணனுக்கு
பாட்டிக்கு கண்ணன்
பிரத்யட்சம் ஆவதோ
பேத்தி
பேரன்களாகவே
அந்த பண்டங்களில்
நா ஊறிய சுவை
மனதை சுண்டி இழுத்த வாசனை
எங்கள் கடந்த காலத்தில்
உறைந்து போன
மீண்டு பெற முடியாத
பிள்ளைப் பருவ அனுபவங்கள்
பண்டங்கள் எங்களைச்
சுற்றி வரும்
நாங்கள் அவற்றைச்
சுற்றி வருவோம்
ஒரு வாரம் ஆனாலும்
இந்த கண்ணன் அமுது
எங்கள் வாழ்க்கையின்
தினசரி அங்கமாக ஜொலிக்கும்
அட்சய பாத்திரம்
விட்டு விட்டுப் போயிருப்பான்!
மெல்ல மெல்ல மறையும்
அந்த குட்டிப் பாதங்கள்
நெஞ்சின் உள்ளே
சொல்லத் தெரியாத
சோகம் ஒன்றையும்
வெற்றிடம் ஒன்றையும்
விட்டுச் செல்லும்
கண்ணா உன்
பாத கமலங்கள்
கோபிகைகளும்
ராதையும்
மீராவும்
அறியாத எங்கள் எளிய
முகவரிகளில்
எப்போது வேண்டுமானாலும்
வருவேன்
அழைக்க வேண்டியதில்லை
என்று சொல்லி விட்டுச் செல்லும்
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009
அவ்வை மன்னிப்பாராக
அகம் அறி
ஆசை அடக்கு
இறை உணர்
ஈகை பழகு
உதவ விழித்திரு
ஊரின் எல்லை காண்
எழு ஞாயிறோடு
ஏக்கம் தவிர்
ஐம்புலனும் ஒன்ற செய்
ஒரு துணையோடு வாழ்
ஓயாமல் முயற்சி கொள்
ஆசை அடக்கு
இறை உணர்
ஈகை பழகு
உதவ விழித்திரு
ஊரின் எல்லை காண்
எழு ஞாயிறோடு
ஏக்கம் தவிர்
ஐம்புலனும் ஒன்ற செய்
ஒரு துணையோடு வாழ்
ஓயாமல் முயற்சி கொள்
திங்கள், 3 ஆகஸ்ட், 2009
சத்திய தரிசனம் -
அன்றாட நெருக்கடிகளில்
காணாமல் போய் விடுகிற
ஆத்மார்த்தமான அபிலாஷைகள் சில
அத்திப் பூக்கள் போல
எப்போதாவது மலர்வது உண்டு
நேற்று என் வாழ்வில் பூத்தது ஒரு பூ.
அம்மாவின் எழுபத்து ஐந்து வருட
வாழ்க்கையின் குறியீடான நேற்று
அம்மாவை மனைவியுடன்
சென்று
வணங்கி
ஆசீர்வாதம்
பெறும்
பெரும் பேறு கிடைத்தது
என் சிந்தைகளில்
எவ்வளவோ நான்
எடுத்துச் சென்றாலும்
அம்மாவின்
எளிமையின் முன்
அவை உருகி விடுகின்றன
ஒரு முழுமையின்
தரிசனத்தில்
ஒரு சேரும் இடத்தின்
உத்தரவாதத்தில்
ஒரு உண்மையின்
சக்தி வெளிப்பாட்டில்
என் சிந்தைகள்
திட்டங்கள்
ஆசைகள்
சர்வமும்
எளிதாகி
வாழ்வை
வாழ்வாக
யதார்த்தமாக
சந்திக்கின்றன
என்னை
என்
நிழல்களிலிருந்து
விலக்கி
நான்
நானாகிற
ஒரு மகத்தான
உண்மைத்தருணம் இது
மிக அபூர்வமாக
வெகு சில கோவில்களில்
கிடைக்கும்
அமைதி
இந்தத் தருணத்திற்குள்
வேரூன்றி இருக்கிறதை
என்னால் உணர முடிகிறது
இந்த சத்திய தரிசனம்
நித்தியம் தொடர
இறை அருள் புரிய வேண்டும்
என் எழுபத்து ஐந்தின்
காலையும்
இந்த சத்திய தரிசனம்
எனக்குக் கிடைக்க வேண்டும்
வேண்டினேன்
அம்மா மறுக்க வில்லை
அம்மாவின் அன்பு
பூட்டப்படாத கதவுகள் கொண்ட
மறுப்பின் வாசனை அறியாத
எதிர்மறை அதிர்வுகள் ஏதும் அற்ற
எப்பொழுதும்
சிரத்தை விழித்தொளிரும்
தெய்வ சன்னதி போன்றது
இங்கே
பிரார்த்தனைகள்
ஒவ்வொன்றும்
உணமையின்
ஊற்றுக்கண்ணிலிருந்து
தான் வெளிப்படும்
இந்த பிரார்த்தனைகள்
தான்
இந்த கோவிலுக்குள்
நம்மை வழி நடத்தும்
தீபங்கள்
சத்திய தரிசனத்தை
இவை
தினமும்
சாத்தியம் ஆக்குகின்றன
காணாமல் போய் விடுகிற
ஆத்மார்த்தமான அபிலாஷைகள் சில
அத்திப் பூக்கள் போல
எப்போதாவது மலர்வது உண்டு
நேற்று என் வாழ்வில் பூத்தது ஒரு பூ.
அம்மாவின் எழுபத்து ஐந்து வருட
வாழ்க்கையின் குறியீடான நேற்று
அம்மாவை மனைவியுடன்
சென்று
வணங்கி
ஆசீர்வாதம்
பெறும்
பெரும் பேறு கிடைத்தது
என் சிந்தைகளில்
எவ்வளவோ நான்
எடுத்துச் சென்றாலும்
அம்மாவின்
எளிமையின் முன்
அவை உருகி விடுகின்றன
ஒரு முழுமையின்
தரிசனத்தில்
ஒரு சேரும் இடத்தின்
உத்தரவாதத்தில்
ஒரு உண்மையின்
சக்தி வெளிப்பாட்டில்
என் சிந்தைகள்
திட்டங்கள்
ஆசைகள்
சர்வமும்
எளிதாகி
வாழ்வை
வாழ்வாக
யதார்த்தமாக
சந்திக்கின்றன
என்னை
என்
நிழல்களிலிருந்து
விலக்கி
நான்
நானாகிற
ஒரு மகத்தான
உண்மைத்தருணம் இது
மிக அபூர்வமாக
வெகு சில கோவில்களில்
கிடைக்கும்
அமைதி
இந்தத் தருணத்திற்குள்
வேரூன்றி இருக்கிறதை
என்னால் உணர முடிகிறது
இந்த சத்திய தரிசனம்
நித்தியம் தொடர
இறை அருள் புரிய வேண்டும்
என் எழுபத்து ஐந்தின்
காலையும்
இந்த சத்திய தரிசனம்
எனக்குக் கிடைக்க வேண்டும்
வேண்டினேன்
அம்மா மறுக்க வில்லை
அம்மாவின் அன்பு
பூட்டப்படாத கதவுகள் கொண்ட
மறுப்பின் வாசனை அறியாத
எதிர்மறை அதிர்வுகள் ஏதும் அற்ற
எப்பொழுதும்
சிரத்தை விழித்தொளிரும்
தெய்வ சன்னதி போன்றது
இங்கே
பிரார்த்தனைகள்
ஒவ்வொன்றும்
உணமையின்
ஊற்றுக்கண்ணிலிருந்து
தான் வெளிப்படும்
இந்த பிரார்த்தனைகள்
தான்
இந்த கோவிலுக்குள்
நம்மை வழி நடத்தும்
தீபங்கள்
சத்திய தரிசனத்தை
இவை
தினமும்
சாத்தியம் ஆக்குகின்றன
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)