சனி, 10 அக்டோபர், 2009

விடுமுறை

உன் பாதச் சுவடுகளைப்
பார்த்ததும் பூரித்தேன்

எனக்கு ஆச்சர்யம் வர வேண்டும் என்று
சொல்லாமல் என்னைத் தேடி
வந்து போய் இருப்பாய் என்றும் யூகித்தேன்

உன் பாதச் சுவடுகளைத்
தொடர்ந்து உனக்கு
அதே ஆச்சர்யம் தர முடியும்
என்று யோசித்தேன்

கடற்கரை வரை வந்து சேர்ந்தேன்
ஓ, மழை கடலில், கரையில்
என் மேனி முழுதும்

நம் இருவரையும்
தொடர்ந்து வந்த இயற்கையை
எண்ணி மாய்ந்து போனேன்

உன் பாதச் சுவடுகள்
கலைந்ததில்
எனக்கு வீடு திரும்பத் தெரியவில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக